Tuesday, April 29, 2008

விழுப்புரம் பாவேந்தர் பேரவை சார்பில் "பாவேந்தர் நினைவேந்தல்" ஊர்திப் பயணம் 21.4.2008 இல் நடந்தது. விழுப்புரம் தொடர் வண்டி நிலையத்தில் தொடங்கியது. வளவனூர், மதகடிப்பட்டு, திருபுவனை, வில்லியனூர்,மூலைக்குளம்,அய்யன்குடிப்பாளையம், சண்முகாபுரம் ஆகிய இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோவில் இடுகாட்டில் பாவேந்தர் நினைவிடத்தில் முடிவடைந்த ஊர்திப்பயணத்தின் இறுதியில் தனித்தமிழ்க் கழகத்தின் தலைவர் திரு தமிழ்நாவன் உரையாற்றினார், மணிமேகலைகுப்புசாமி நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். புதுச்சேரிப் பகுதியில் ஏற்பாடுகளை தனித்தமிழ்க் கழகச் செயலர் சீனு . அரிமாப்பாண்டியன் செய்திருந்தார்.அய்யன்குடிப்பாளையத்தில் ஐயா. குணத்தொகையன் குடும்பத்தினர் சிறந்த பகலுணவை அளித்தனர்

No comments: